ஆஞ்சனேயா


நடிகர்கள்: அஜீத், மீரா ஜாஸ்மின், ரகுவரன், சீதா, பொன்னம்பலம்
இசை: மணி சர்மா
இயக்கம்: மகாராஜன்

"தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் பதவிக்கு இந்தப் படம் மூலம் அப்ளிகேஷன் போடுகிறேன்" என்று அஜீத் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படம்.. போய்ப் பார்த்தால் மண்டை காய்ந்து போனது.. "தமிழ் சினிமாவின் சொதப்பல் ஸ்டார்" பதவிக்கு வேண்டுமானால் படம் கொஞ்சம் உதவ முடியும்.. படத்தில் வரைமுறையே இல்லாமல் இஷ்டத்துக்கு சொதப்பியிருக்கிறார்கள்.. தமிழ் சினிமாவின் இப்போதைய (எப்போதும்) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நல்ல ரசிகன் என்ற முறையில் எனக்கு வயிறு எரிந்தது..

ஒரு சண்டை, ஒரு காதல் காட்சி, ஒரு பாட்டு, ஒரு செண்ட்டி.. மீண்டும் ஒரு சண்டை, ஒரு காதல் காட்சி, ஒரு பாட்டு, ஒரு செண்ட்டி.. மீண்டும் ஒரு சண்டை, ஒரு காதல் காட்சி, ஒரு பாட்டு, ஒரு செண்ட்டி.. மீண்டும்.. அய்யோடா சாமி..!!! தலைவலி..!!

போலீஸ் வேலைக்கு IPS எழுதி தேர்வாகிறார் அஜீத்.. அவர் பெயர் பரமகுரு.. கடைசி வரை ஆஞ்சனேயாவுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று விளக்கப்பட்ட மாதிரி தெரியவில்லை.. (கடைசிக் காட்சிகளில் மிகுந்த மனவேதனையுடன் நான் படம் பார்த்துக் கொண்டிருந்ததால் அப்போது விளக்கியிருந்தாலும் எனக்குத் தெரிந்திருக்காது.. மன்னித்துக் கொள்ளுங்கள்..)

வேலையில் சேரக் காத்திருக்கும் போது பல பேரோடு தகராறு செய்கிறார்.. (அநீதி கண்டு கொந்தளிக்கும் கேரக்டராம்..) அதனால் வேலைக்கே ஆபத்து வருகிறது.. அப்புறம் அஜீத் கோர்ட்டில் தானே வாதாடி, வில்லன்களின் சூழ்ச்சிகளை முறியடித்து எப்படி போலீஸ் வேலையில் சேர்கிறார் என்பது தான் கதை.. அதாவது, இடைவேளை வரைக்கும்.. அப்புறம் அவர் வேலையில் சேர்ந்த பிறகு புது வில்லன்கள் வருகிறார்கள்.. புதுக் குழப்பங்கள்.. புதுத் தலைவலிகள்..!!

படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை காதல் காட்சிகள் தீர்த்து வைக்கின்றன.. மீரா ஜாஸ்மினுக்கு ஏன் அஜீத் மேல் காதல் வருகிறது, எப்படிக் காதலிக்கிறார்கள், எங்கே சந்திக்கிறார்கள் என்பதெல்லாம் ஒரே மர்மமாய் இருக்கிறது.. ஆனால் ரெண்டு டூயட் மட்டும் கரெக்டாய் வந்து விடுகிறது..

ஒரு கல்லூரியைக் காட்டுகிறார்கள்.. திடீரென்று அஜீத் அந்தக் கல்லூரி மாணவர்களோடு ஒரு பாட்டுப் பாடி ஆடுகிறார்.. (போலீஸ் வேலையில் சேர்ந்த பிறகு..) எதற்கு வந்தார், எதற்கு ஆடுகிறார் என்பதெல்லாம் ஆண்டவனுக்காவது தெரியுமா என்று சந்தேகமே..

கல்லூரி கலாட்டாவின் சாட்சியாக இருக்கும் மாணவனின் தாயாக சீதா.. ஏதோ பரவாயில்லை என்று படத்தில் சொல்லக்கூடிய ஒரே விஷயம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே.. (அதற்காகவெல்லாம் படத்தைப் பார்த்துத் தொலைக்காதீர்கள்.. தண்டம்..!!)

என்ன? இசையா..?? படத்தில் எதுவுமே சரியில்லை.. இசையை மட்டும் குறிப்பிட்டு எல்லாம் என்னால் திட்ட முடியாது.. எனக்கும் கொஞ்சம் மனிதாபிமானம் எல்லாம் உண்டு..

மொத்தத்தில், This film is a positive embarrassment. Not only to Ajith and Mahaaraajan, but also to every Tamil Movie viewer. Total Crap..!!

0 Comments:

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: